சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 45 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 45 நபர்களுடன் (02) உள்ளூர் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு மூலம் 26 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகொன்றும், மேற்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 4வது துரித தாக்குதல் படகுகள் படையணியின் பீ 481 துரித தாக்குதல் படகு மூலம் 19 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்றும் இன்று (2022 மே 27) கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடல் பயணத்திற்கு தகுதியற்றவை என அவதானித்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த பல நாள் மீன்பிடி படகுகளில் இருந்தவர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கடல் மார்க்கமாக வேறு நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதுடன் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை மனித கடத்தல்காரர்கள் அதிகளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர், கடலுக்குச் செல்லத் தகுதியற்ற கப்பல்கள் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு இவ்வாறான ஆபத்தான மனித கடத்தலில் சிக்கி உயிரையும் உடமைகளையும் அழித்துக்கொள்வது மட்டுமன்றி சட்டத்தின் முன் குற்றவாளிகளாகுவதையும் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.