சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிருவனத்திற்கு சொந்தமான P 014 கரையோர ரோந்து படகின் கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) காலை யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் கொண்ட கேரள கஞ்சாவை இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படை நடவடிக்கையின் காரணமாக கடத்தல்காரர்கள் இந்த கேரள கஞ்சாவை கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என நம்பப்படுவதுடன், கேரள கஞ்சா தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.