அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு திருத்தம் செய்வதற்கு கடற்படையின் பங்களிப்பு

அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் அதனை கைமுறையாகச் செயற்படுத்துவதற்கு 2022 ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

அம்பாறை, களுகல்ஓய குளத்தில் உள்ள இரு மதகு கதவுகளின் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை சீர் செய்யுமாறு அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகத்தின் பிரதம பொறியாளரினால் கடற்படையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டலின் கீழ், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் ஆலோசனையின் பேரில், 2022 ஒக்டோபர் 20 ஆம் திகதி, கட்டளை சுழியோடி குழுவொன்றின் பங்குபற்றுதலுடன் களுகல்ஓய குளத்தில் பழுதடைந்திருந்த மதகு கதவு பல முயற்சிகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.