இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து வடகடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று 07 இந்திய மீனவர்களுடன் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு தெற்கு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணியை அதிகரித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து, நெடுந்தீவுக்கு தெற்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வடக்கு கடற்படை கட்டளையுடன் இனைக்கப்பட்ட இலங்கை கடலோர காவல்படை படகொன்று இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டதுடன் அப்போது நெடுந்தீவுக்கு தெற்கு கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகொன்றுடன் ஏலு (07) இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாரு கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.