சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் இன்று (2023 ஜனவரி 24) அதிகாலை இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து, தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கரையோரங்களை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கௌனி நிறுவனத்தின் கடற்படையினர் சிலாபம் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் துங்கல்பிட்டி களப்பு பகுதியில் இன்று (2023 ஜனவரி 24) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது குறித்த களப்பு அருகில், சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக 35 சாக்கு மூட்டைகளில் அடைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோ 700 கிராம் பீடி இலைகளுடன் இந்த பீடி இலைகள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) டிங்கி படகுகளும், இரண்டு சந்தேக நபர்களும் (02) கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் வசிக்கும் 42 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களை கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.