சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் கல்பிட்டி, இப்பன்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 26 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்கள், 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், ஒரு டிங்கி படகு மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.