10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் 2023 பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி 2023 பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலக்கேணி கடற்படை முகாமின் கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியிலுள்ள நெல் வயல் ஒன்றில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை விசாரணை செய்யப்பட்டதுடன் அந்த நெல் வயல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த சந்தேகநபர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு சுமார் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன் சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி, இராமநாதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.