சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 பிப்ரவரி 09) அதிகாலை புத்தளம், சேரக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 239 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் (ஈரமான எடை) மற்றும் 921 கிலோகிராம் சுறா துடுப்புகள் (ஈரமான எடை) கொண்ட இரண்டு லொறிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023 பிப்ரவரி 09) அதிகாலை புத்தளம், சேரக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளை சோதனையிட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து 04 பைகளில் அடைக்கப்பட்ட 239 கிலோ (ஈரமான எடை) உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் 19 பைகளில் அடைக்கப்பட்ட 921 கிலோ (ஈரமான எடை) சுறா துடுப்புகள் மற்றும் இரண்டு (02) சந்தேகநபர்களுடன் குறித்த இரு (02) லொறிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 48 வயதுடைய புத்தளம் மற்றும் அளுத் எழுவன்குளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், உலர்ந்த கடல் அட்டைகள், சுறா துடுப்புகள் மற்றும் இரண்டு (02) லொறிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.