சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு மேற்கு கடற்பரப்பில் 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 62 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் இந்திய படகொன்று மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் தேசிய அபிலாஷையை அடைவதற்காக, கடற்படை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையில் பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான P411 விரைவு தாக்குதல் படகு மூலம் 2023 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்திய படகொன்று கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, குறித்த படகில் இரண்டு சாக்குகளில் (02) இருபத்தி மூன்று (23) பார்சல்களாக பொதி செய்யப்பட்ட 62 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், 62 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மற்றும் இந்திய படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.