கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 3593 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் வீதி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றுடன் ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல் சமுத்திரரக்ஷாவால் ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2023 ஏப்ரல் 17,) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த போதைப்பொருள் பரிசோதனையில் கலந்து கொண்டார்.

அதன்படி, இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் இலங்கைக் காவல்துறை (போதைப்பொருள் தடுப்புப் பணியகம்) இணைந்து நடத்திய விசேட கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துக்குச் சொந்தமான சமுத்திரரக்ஷா கப்பலை பயன்படுத்தி இலங்கையின் தெற்கில் உள்ள ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் ஆழ்கடல் பகுதியில் 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி மேற்கொண்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலொன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டதுடன் அங்கு எட்டு (08) பைகளில் அடைத்து 160 பொதிகளாக வைக்கப்பட்டிருந்த179 கிலோ 654 கிராம் ஹெராயின் (பொதிகள் உட்பட) கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் குறித்த கப்பல் மற்றும் அங்கு இருந்த 06 உள்ளூர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த வீதி பெறுமதி 3593 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.

இந்த விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட நாகுலுகமுவ, குடாவெல்ல, நெடோல்பிட்டிய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) உத்தரவின் பேரில், போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் தேசிய நோக்கத்தை அடைவதற்காக, ஒரு பொதுவான இலக்கை நோக்கி. அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவதன் மூலம் கடற்படையால் இத்தகைய வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 4908 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வீதி பெறுமதியான போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.