வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 ஏப்ரல் 17) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் மின்சார விளக்குகளை பயன்படுத்தி மற்றும் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) பேருடன் மூன்று டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி இரவு வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு சொந்தமான மாமுனை கடற்படை பிரிவின் சிறிய கப்பல்களை பயன்படுத்தி மாமுனை கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பரப்பில் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேருடன் ஒரு டிங்கி படகு மற்றும் மின்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இன்று (2023 ஏப்ரல் 17) காலை வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்குச் சொந்தமான சுண்டிக்குளம் கடற்படைப் பிரிவின் மரையின் கடற்படையினரால் சுண்டிக்குளம் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு பேர், (08) இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைள் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் 28 முதல் 59 வயதுக்குட்பட்ட மன்னார், தளயாடி, புலயார்கோயிலடி, புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த பன்னிரண்டு (12) பேர், மீன்பிடி சாதனங்கள் மற்றும் மூன்று டிங்கிகள் (03) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.