மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு திருகோணமலை, நயாறு மற்றும் அலம்பில் கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு பேர் (08) நான்கு 04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இரவு, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய நிறுவனத்திற்கு சொந்தமான நயாறு கடற்படை பிரிவின் துரித நடவடிக்கை படகுகள் படையணி மற்றும் முல்லைத்தீவு உதவி மீன்பிடி பரிசோதக அலுவலகத்தின் அதிகாரிகள் நயாறு மற்றும் அலம்பில் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட பகுதி கடலில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் 22 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட புத்தளம், குச்சவெளி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த எட்டு (08) பேர், மீன்பிடி சாதனங்கள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முலத்தீவு மீன்பிடி உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.