சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 836 கிலோகிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2023 மே 01) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் இரு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனம் மூலம் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று அவதானித்து சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு, டிங்கியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பதினேழு (17) பைகளில் அடைக்கப்பட்ட 550 கிலோ 750 கிராம் பீடி இலைகளுடன் குறித்த டிங்கி படகு (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023 மே 01) அதிகாலை குடாவ கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது (09) பைகளில் அடைக்கப்பட்ட 286 கிலோ 200 கிராம் பீடி இலைகள் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 23 வயதுடைய கல்பிட்டி ஆனவாசலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர்கள் டிங்கி படகு (01) மற்றும் 836 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.