மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் (02), இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு சொந்தமான சுண்டிக்குளம் கடற்படை பிரிவினரால் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், (02) இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த இரண்டு (02) நபர்கள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண உதவி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.