கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடலில் மற்றும் கடற்கரையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மே மாதம் 02 ஆம் திகதி காலை கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறைக்கு சொந்தமான கரையோர ரோந்துக் கப்பல்களை ஈடுபடுத்தி திருகோணமலை கொரல்கோவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) பேருடன் ஐந்து (05) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட சீன துறைமுகம், கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாலம் கானப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இருபத்தைந்து (25) நபர்கள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கொட்பே கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.