கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் 2023 மே மாதம் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் 08 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மே மாதம் 5 ஆம் திகதி முல்லைத்தீவு, கோக்கிளாய் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய மற்றும் ரன்வேலி ஆகிய நிருவனங்களில் கடற்படையினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு, இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய நிறுவகத்தின் கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் மின் விளக்குகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் கைது செய்தனர். மேலும் கோக்கிளாய் களப்பு பகுதியில் மின்சார விளக்குகளை பயன்படுத்தி மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) பேருடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிறுவனத்தின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட புல்மூட்டை, திருகோணமலை, கோக்கிளாய், மன்னார், மதுரங்குளி, ரொட்டவெவ, நீர்கொழும்பு, கட்டுனேரிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள், டிங்கி படகுகள், சட்டவிரோத மீன்பிடி உபகரனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.