மன்னார் கடல் பகுதியில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 மே மாதம் 8 ஆம் திகதி மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர்; வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன.

வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மே மாதம் 8ஆம் திகதி மன்னார், வங்காலே கடற்பகுதியில் வடமத்திய கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்று ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருந்த ஏழு பேர் (07); வாட்டர் ஜெல் எனப்படும் பத்து (10) வணிக வெடி குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், இரண்டரை அடி 2.5 அடி நீள பாதுகாப்பு உருகி மற்றும் சுழியோடி உபகரணங்கள் ஆகியவையுடன் குறித்த படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர்கள், டிங்கி மற்றும் வர்த்தக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்காலே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.