வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து திருகோணமலை ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்ற வாட்டர் ஜெல் எனப்படும் வணிக வெடி குச்சிகள் நாற்பத்தைந்துடன் (45) சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இரவு திருகோணமலை ஏறக்கண்டி பகுதியில் மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கயின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த ஒருவரை சோதனை செய்தனர் அப்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு சென்ற வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்கள் நாற்பத்தைந்து (45) குச்சிகள் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) திருகோணமலை, ஏறக்கண்டியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் நாற்பத்தைந்து (45) வணிக வெடிபொருட்கள் குச்சிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.