கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 26 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் லங்காபடுன கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது உரிம நிபந்தனைகளை மீறி இரவு நேர சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி ஆறு (26) பேர், ஒன்பது (09) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஜூன் மாதம் 13 ஆம் திகதி இரவு, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கைளில் ஈடுபட்டு கடற்கரைக்கு வந்த பதினொரு (11) பேர், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், 2023 ஜூன் மாதம் 14 ஆம் திகதி காலை கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கோத்தபாய நிருவனத்தின் கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பரப்பில், மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுழியோடி நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாத கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள பதினைந்து (15) பேருடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார், கிண்ணியா மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லங்காபடுன கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பதினொரு (11) பேர், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாலரிடமும், முல்லைத்தீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பதினைந்து (15) பேர், ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடமும் ஒப்படைக்கப்பட்டனர்.