சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பெரிய அரிச்சால் தீவுகளுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் 2023 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதிவூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் ஐநூற்று முப்பது (530) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட (ஈரமான எடை) (01) டிங்கி படகொன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இரவு, கல்பிட்டி, பெரிய அரிச்சால் தீவுகளுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியில் இருந்து நிலத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த டிங்கி படகொன்று ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த டிங்கி படகில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பதினாறு (16) பைகளில் அடைக்கப்பட்ட ஐந்நூற்று முப்பது கிலோகிராம் (530) பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் இரண்டு சந்தேகநபர்கள் (02) இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 44 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவர் (02), ஐந்நூற்று முப்பது (530) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் டிங்கி படகு ( 01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.