வவுனியா பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

வவுனியா, இரட்டைப்பெரியகுளம் பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் 2023 ஜூலை 21 ஆம் திகதி திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவியளித்தனர்.

அதன்படி, 2023 ஜூலை மாதம் 21 ஆம் திகதி இரவு வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் செயற்பாட்டு அறைக்கு வவுனியா பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பதற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்கும் கடற்படையின் தீயணைப்புக் குழுவின் உதவி வழங்குமாறு கோரியுள்ளனர்.

இதன்படி, உடனடியாக அறிவித்தலுக்கு பதிலளித்த கடற்படையினர், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபய நிருவனத்துடன் இணைக்கப்பட்ட தீயணைப்பு வண்டி (01) மற்றும் இரண்டு நீர் பவுசர்கள் (02) வவுனியா இரட்டைப்பெரியகுளத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் ஏனைய தீயணைப்பு குழுக்களுடன் கடற்படையின் தீயணைப்பு குழுவினர் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும், நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.