54 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி வத்திராயன் கடற்பகுதியில் இன்று (2023 ஜூலை 23) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தின் கடற்படையினர் இன்று (2023 ஜூலை 23) வெத்தலக்கேணி வத்திராயன் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர் அப்போது குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்று கண்காணித்து சோதனையிட்ட போது, 165 கிலோ கிராம் கேரள கஞ்சா அடங்கிய எழுபத்தைந்து (75) பார்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 54 மில்லியன் ரூபாவுக்கும் மேல் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய வெத்தலக்கேணி, முள்ளியான் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், 165 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.