வடக்கு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 21 மற்றும் 22 திகதிகளில் யாழ்ப்பாணம் கதைக்காடு மற்றும் வெத்தலக்கேணி கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) பேருடன் பதினொரு (11) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைக் கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஜூலை மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தைச் சேர்ந்த சுண்டிக்குளம், சாளை, மாமுனை, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்படைப் பிரிவுகளின் கடற்படையினரால் கதைக்காடு மற்றும் வெத்தலக்கேணி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பதினாறு (16) நபர்களுடன் பதினொரு (11) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் முள்ளியான் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் வசிக்கும் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பதினாறு (16) பேர், பதினொரு (11) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.