சுமார் 28 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 23 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், குடைரிப்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 86 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு உட்பட்ட மாமுனை கடற்படை பிரிவின் கடற்படையினர் 2023 ஜூலை 23 ஆம் திகதி மாலை குடைரிப்பு முன்னால் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அங்கு கடற்படையினரின் நடவடிக்கையை கருத்திற் கொண்டு, கடத்தல்காரர்களால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடற்பரப்பில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பைகளில் அடைக்கப்பட்ட 86 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை குறித்த கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.