கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 18 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 08 சந்தேகநபர்கள் கைது

இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 573 கடல் மைல் தொலைவில் (சுமார் 1061 கிமீ) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 900 கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 08 சந்தேக நபர்களுடன் வெளிநாட்டு இழுவை படகொன்று 2023 ஜூன் 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இழுவை படகும் சந்தேக நபர்களும் 2023 ஜூன் 28 ஆம் திகதி காலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படை புலனாய்வு, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கை கடற்படையால் தெவுந்தரவிலிருந்து 573 கடல் மைல் (சுமார் 1061கிமீ) தொலைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஜூன் 21ஆம் திகதி நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு இழுவை படகைக் கண்டறிந்ததையடுத்து, 2023 ஜூன் 22ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கடற்படையினரால் இந்த கப்பலை கைது செய்யப்பட்டது. மேலதிக தேடுதலின் போது, படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 926 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதன்படி, போதைப்பொருள் கடத்திய இழுவை படகு மற்றும் 08 வெளிநாட்டு பிரஜைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 18.5 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள், வெளிநாட்டு பல நாள் கப்பல் மற்றும் 926 கிராம் ஹெரோயின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.