சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, நிலாவேளி மற்றும் லங்காபடுன கடற்பகுதியில் 2023 ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்து (10) பேர், மூன்று (03) டிங்கி படகுகள் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் அட்டைகள் நூற்று பதினாறுடன் (116) சுழியோடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடற்கரைகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுபடுத்த கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஓகஸ்ட் 03 ஆம் திகதி இரவு நிலாவேளி கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த ஒருவர் அவதானித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு, வெடிமருந்துகளை பயன்படுத்தி இரவு வேளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களுடன் குறித்த நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 2023 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிறுவனத்தின் கடற்படையினர் லங்காபடுன கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், குறித்த கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த குழுவொன்றை சோதனையிட்டனர். அங்கு சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 பேருடன் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட நூற்றி பதினாறு (116) கடல் அட்டைகள், மூன்று (03) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 48 வயதுக்குட்பட்ட தம்பலகமுவ மற்றும் சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பத்து (10) பேர், மீன்கள், நூற்று பதினாறு (116) கடல் அட்டைகள், 03 டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.