318 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி சேரக்குளிய கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது அந்த கடற்கரை பகுதிக்கு மிதந்து வந்த முந்நூற்று பதினெட்டு (318) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான) எடை) கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்களான விஜய, தம்பபன்னி மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படை ஆகியவையின் கடற்படையினர் இணைந்து கல்பிட்டி சேரக்குளிய கடற்கரை பகுதியில் 2023 ஆகஸ்ட் 12 ஆம் திகதி சிறப்பு ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கை யொன்றை மேற்கொண்டனர். அங்கு, கடலோரப் பகுதியில் இருந்த ஒன்பது (09) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் முந்நூற்று பதினெட்டு (318) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கடற்படையின் நடவடிக்கையினால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் இந்த பீடி இலைகளை சேரக்குளி கடற்கரை பகுதியில் கைவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.