சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மாலை திருகோணமலை, கல்லராவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்தனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மாலை கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை, கல்லராவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது. குறித்த பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு பேருடன் (08) இரண்டு (02) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்தனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட பொடுவக்கட்டு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த எட்டு (08) சந்தேகநபர்கள், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.