சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2447 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் 22 மற்றும் இன்று (23 ஆகஸ்ட் 2023) புத்தளம், பாலவிய, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் 2447 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த நடவடிக்கைகளின் போது, இந்த சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 01 சந்தேக நபர் மற்றும் 01 லொறியும் கைது செய்யப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு சிலாபம், மைக்குளம் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி வண்டியொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட சுமார் 1460 கிலோ எடையுள்ள 46 சாக்கு பீடி இலைகளுடன் குறித்த லொறி வண்டி (01) மற்றும் சந்தேக நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி காலை மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிருவனத்தின் கடற்படையனர் நீர்கொழும்பு, கம்மல கடற்கரை மற்றும் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் அறுநூற்று ஐம்பது (650) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைப்பற்றினர். 2023 ஆகஸ்ட் 22 மற்றும் இன்று (23 ஆகஸ்ட் 2023) வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் புத்தளம் சின்னபாடு மற்றும் பெரியபாடு கடற்கரை பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் முந்நூற்று முப்பத்தேழு (337) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம், 2023 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி சிலாபம், மைக்குளம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் லொறி மற்றும் சுமார் 1460 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நீர்கொழும்பு கம்மல பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அறுநூற்று ஐம்பது (650) கிலோகிராம் பீடி இலைகள் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் புத்தளம் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் முந்நூற்று முப்பத்தேழு (337) கிலோகிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.