சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 176 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் மற்றும் சீதுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மாலை சீதுவ, நைனமடம பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 176 கிலொ கிராம் பீடி இலைகள் கைப்பற்றனர்.

அதன்படி மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெலனி நிருவனத்தின் கடற்படையனர் மற்றும் சீதுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சீதுவ, நைனமடம பகுதியில் 2023 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், பத்து (10) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட சுமார் நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வய்க்காலை கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.