சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

புத்தளம், தில்லையடி பகுதியில் இன்று (26 ஆகஸ்ட் 2023) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியினூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்றிரண்டு (792) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 26) காலை புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடலோரப் பகுதியில் கைவிடப்பட்ட இருபத்தி மூன்று (23) பார்சல்களில் இருந்த சுமார் 792 கிலோ 800 கிராம் பீடி இலைகள் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று இரண்டு (792) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.