வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

லங்காபடுன, குச்சவேளி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2023 ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம், சளை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேருடன் ஆறு (06) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்துறை மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபடுன நிருவனங்களின் கடற்படையினர் லங்காபடுன மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளிலும், 2023 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிறுவனத்தின் கடற்படையினர் திருகோணமலை குச்சவேளி கடல் பகுதியிலும் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலக்கேணி கடற்படை பிரிவின் கடற்படையினர் யாழ்ப்பாணம் சளை கடல் பகுதியலும் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகளை மற்றும் சட்டவிரோத மின் விளக்குகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினைந்து (15) பேருடன் ஆறு (06) டிங்கி படகுகள், சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, ஈச்சாலம்பத்து, குச்சவேளி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 17 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 15 நபர்கள், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் அவர்களது மீன்பிடி சாதனங்கள் திருகோணமலை, கோட்பே, குச்சவேளி மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.