சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீர்கொழும்பு, பிடிபன தடாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தடாகம் பகுதியினூடாக சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று நாற்பது (440) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) படகொன்று கைப்பற்றப்பட்டது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெலணி நிறுவனத்தின் கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபன தடாகம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து பரிசோதித்தனர். அங்கு, பதினைந்து (15) பொதிகளாக உள்ள 440 கிலோ 900 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நானூற்று நாற்பது (440) கிலோ தொன்னூறு (900) கிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அனுமதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.