வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கடைக்காடு கடற்பகுதியில் 2023 செப்டெம்பர் 01 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் இரண்டு (02) படகுகள் கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 செப்டெம்பர் 01 ஆம் திகதி இரவு வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு சொந்தமான சுண்டிக்குளம் கடற்படை பிரிவின் கடற்படையினர் யாழ்ப்பாணம் கடைக்காடு கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முள்ளியான் பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் ஏழு (07) பேர், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.