660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் மற்றும் நொரோச்சோலை பொலிஸார் இணைந்து 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி புத்தளம், கரம்பே சந்தி வீதித் தடுப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் அறுநூற்று அறுபது (660) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் நொரோச்சோலை பொலிஸார் இணைந்து 2023 செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி கல்பிட்டியிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று புத்தளம், கரம்பே சந்தி வீதித் தடுப்பில் நிறுத்தி சோதனை செய்தனர். அங்கு, குறித்த லொறியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இருபத்து நான்கு (24) பார்சல்களில் அடைக்கப்பட்ட அறுநூற்று அறுபது (660) கிலோ ஐந்நூறு (500) கிராம் பீடி இலைகளுடன், சந்தேக நபர் ஒருவர் (01) மற்றும் குறித்த லொறி (01) கைது செய்யப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் (01), லொறி (01) மற்றும் அறுநூற்று அறுபது (660) கிலோ ஐந்நூறு (500) கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.