சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 09, 10 மற்றும் இன்று (2023 செப்டெம்பர் 11,) திருகோணமலை, நிலாவேலி மற்றும் கிண்ணியா கடற்பரப்புகளிலும் யாழ்ப்பாணம் சாலைப் பகுதியிலுள்ள கடற்பரப்பிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி, மின் விளக்குகளப் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் 04 டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 செப்டெம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி கடற்பகுதியிலும் அடுக்குப்பாடு கடற்பரப்பிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேருடன் (09) இரண்டு படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் சாலை கடற்பகுதியில் 2023 செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி பிரிவின் கடற்படையினர் மேற்கொன்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவருடன் (01) டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கோகன்ன மற்றும் பரகும்பா ஆகிய நிருவனங்களில் கடற்படையினர் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கிண்ணியா சின்னமுலச்சேனை கடற்கரை பகுதியில் இன்று (2023 செப்டம்பர் 11) மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களுடன் ஒரு டிங்கி படகு (01) மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் நிலாவெளி, திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 பேர், நான்கு (04) டிங்கி படகுகள், மீன்பிடி மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பரிசோதகர் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.