சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து மூன்று (2223) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இரவு புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்கரை பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டாயிரத்து இருநூற்றி இருபத்து மூன்று (2223) நூற்று (100) கிராம் பீடி இலைகள் கொண்ட எழுபது (70) பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நொரோச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், இரண்டாயிரத்து இருநூற்று இருபத்தி மூன்று (2223) கிலோ நூற்று (100) கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.