சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி வன்னிமுந்தலம குளத்தில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி கல்பிட்டி, வன்னிமுந்தலம குளம் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த குளம் பகுதியாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட அறுநூற்று முப்பத்தொன்பது (639) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகு ஒன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி கல்பிட்டி வன்னிமுந்தலம குளம் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நிலத்தை நோக்கி வேகமாகச் சென்ற டிங்கி படகு ஒன்று அவதானித்து பரிசோதித்தனர். அப்போது, பத்தொன்பது (19) பைகளில் (ஈரமான எடை) பொதி செய்யப்பட்ட அறுநூற்று முப்பத்தொன்பது (639) கிலோகிராம் பீடி இலைகளுடன் குறித்த டிங்கி படகு (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேகநபர்களும் 23 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்ட கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த இரண்டு (02) சந்தேக நபர்கள், அறுநூற்று முப்பத்தொன்பது (639) கிலோகிராம் பீடி இலைகள், (ஈரமான எடை) டிங்கி படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.