வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நகர்கோவில் கடற்பரப்பில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மூன்று (03) நபர்கள், சுழியோடி உபகரணங்கள், சுமார் இருநூற்று ஐம்பது (250) கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்படை நிலைப்படுத்தல் வெத்தலக்கேணி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மூவருடன் இருநூற்று ஐம்பது (250) கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரும் (03), சுழியோடி உபகரணங்கள், டிங்கி படகு(01) மற்றும் சுமார் இருநூற்றி ஐம்பது ( 250) கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள காரியாலயத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.