நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டெம்பர் 28,) தென் மாகாணத்தில் சில பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளனர்.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில், அவசர வெள்ளச் சூழ்நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை அனர்த்தத்திலிருந்து மீட்பதற்கும், தென் கடற்படைக் கட்டளை மூலம் அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு நிவாரணக் குழுவையும் கம்புருபிட்டிய பிரதேசத்திற்கு இரண்டு (02) குழுகளும் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படையின் கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.