சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை நோர்வே தீவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மற்றும் ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் ஒரு டிங்கி படகு (01), ஒரு லொறி வண்டி (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இரவு, கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் பரகும்பா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை நோர்வே தீவுக்கு முன்னால் உள்ள கடற்பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் ஒரு படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேபோன்று, இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் 2023 ஒக்டோபர் 02 ஆம் திகதி இரவு ஏறக்கண்டிப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 105 கிலோ கிராம் மீன் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற லொறியுடன் ஒருவர் (01) கைது செய்தனர்.

இவ்வாரு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளேமணல், கிண்ணியா மற்றும் எறக்கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும், 23 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை நோர்வே தீவுக்கு முன்னால் உள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 06 பேர், டிங்கி படகு மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், எறக்கண்டி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (01) மற்றும் லொறி வண்டி (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.