சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, போல்டர் முனைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில், வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் மற்றும் நோர்வே தீவு கடற்பகுதியில் 2023 ஒக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினைந்து (15) நபர்களுடன் 04 மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினர் போல்டர் முனைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 2023 ஒக்டோபர் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்துள்ளனர். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபடுன நிருவனத்தின் கடற்படையினர் 2023 ஒக்டோபர் 03 ஆம் திகதி வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வந்த நபருடன் (01) ஒரு டிங்கி படகு மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் மகாவலி நிருவனத்தின் கடற்படையினர் நோர்வே தீவு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு பேருடன் (07) ஒரு டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாரு கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட கிண்ணியா மற்றும் பொடுவகட்டு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் படி திருகோணமலை போல்டர் முனைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏலு சந்தேகநபர்கள் (07), டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் ஆகிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திலும், வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகதிலும், நோர்வே தீவிற்கு அப்பால் கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்கள் (07), டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்பே மீன்பிடி ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.