சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகள் கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த 02 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, குடாவ கடற்கரையில் 2023 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த கடல் அட்டைகள், கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த இரண்டு (02) நபர்களுடன் 274 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி யொன்று (01)கைது செய்யப்பட்டன.

கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, 2023 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியொன்று அவதானித்துச் சோதனையிடப்பட்டது. அங்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த கடல் அட்டைகள் ஏற்றிச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த இருவருடன் 274 கிலோ 800 கிராம் எடையுள்ள உலர்ந்த கடல் அட்டைகள் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் கல்பிட்டியைச் சேர்ந்த 37 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள், 274 கிலோ 800 கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.