40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் 2023 நவம்பர் 20 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடலோரப் பகுதியில் ஒரு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்று ஒறு கிலோ கிராமுக்கு அதிகமான (101) எடையுள்ள (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கரையோரப் பகுதியில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டைகளை கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, அந்த மூன்று மூட்டைகளிலும் (03) ஐம்பத்தொரு (51) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 101 கிலோ கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி மதிப்பு நாற்பது (40) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.