சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 09 பேர் கடற்படையினரால் கைது

மன்னார், அரிப்பு கடற்பரப்பில் 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது பேர் (09), மீன்பிடி உபகரணங்கள், ஆயிரத்து முன்னூற்று நான்கு கடல் அட்டைகள் (1384) மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா நிருவனத்தின் தாள்வுபாடு கடற்படைப் பிரிவுக்கு சேர்நத சிறப்பு படகுகள் படையணியின் கடற்படையினர் மன்னார் அரிப்பு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை சோதனை செய்தனர் அப்போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி குறித்த கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்துக்கொண்டிருந்த ஒன்பது (09) நபர்களுடன், சுழியோடி உபகரணங்கள், 1384 கடல் அட்டைகள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டது.

குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 47 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மெலும் சந்தேகநபர்கள், அவர்களின் உபகரணங்கள் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.