சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 29,) சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரெண்டு (12) பேருடன் நான்கு (04) டிங்கி படகுகள், ஆயிரத்து அறுநூற்று எழுபது கடல் அட்டைகள் (1670) மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 29,) அதிகாலை சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில், மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நான்கு (04) படகுகள் அவதானித்து பரிசோதிக்கப்பட்டன. அங்கு சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) பேர் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் குறித்த படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலே மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 23 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 பேர், நான்கு டிங்கி படகுகள் (04), சுமார் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.