சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13,) அதிகாலை சிலாவத்துறை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் (02), எண்ணூற்று எழுபத்து நான்கு ( 874) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (2023 டிசம்பர் 13,) அதிகாலை, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் சிலாவத்துறைப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) படகுகள் அவதானித்து ஆய்வு செய்தனர். அப்போது குறித்த படகில் சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன், எண்ணூற்று எழுபத்து நான்கு (874) கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் பகுதிச் சேர்ந்த 22 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஏழு (07) பேர், இரண்டு (02) டிங்கி படகுகள், சுமார் எண்ணூற்று எழுபத்து நான்கு கடல் அட்டைகள் (874) மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.