வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 டிசம்பர் 03 முதல் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பராக்கிரமபுர பகுதிக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் தற்போது அப் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மா ஓயா பெருக்கினால் பதவிய பராக்கிரமபுர பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு, அப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடற்படை நிவாரண குழுவினர் டிங்கி படகுகள் மூலம் தேவையான போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான கூடுதல் நிவாரண குழுக்களை கடற்படையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.