சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, மன்னார் வங்காலே, யாழ்ப்பாணம் கல்முனெதுடுவ பிரதேச கடற்பகுதிகளில் மற்றும் நீர்கொழும்பு கரையோர கடற்பகுதியில் 2023 டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினேழு (17) நபர்களுடன் ஆறு (06) டிங்கி படகுகள், சுமார் எழுநூற்று நாற்பதி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 டிசம்பர் 13 ஆம் திகதி வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினர் சிலாவத்துறை கடற்பகுதியிலும், வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ நிருவனத்தின் கடற்படையினர் வங்காலே கடல் பகுதியிலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தின் கடற்படையினர் கல்முனை துடுவ பிரதேச கடற்பகுதியிலும் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிருவனத்தின் கடற்படையினர் நீர்கொழும்பு கரையோரப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினேழு (17) பேர், ஆறு (06) படகுகள், எழுநூற்று நாற்பத்தி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்தனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், வங்காலே, நீர்கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 61 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பதினேழு (17) பேர், 06 டிங்கி படகுகள், எழுநூற்று நாற்பத்தி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகங்கள் மற்றும் நீர்கொழும்பு மற்றும் மன்னார் உதவி மீன்பிடி பரிசோதகர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.