தலைமன்னார் பகுதியில் தனியார் காணியொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

தலைமன்னார், பீயர்கம பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் 2024 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்தி சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவி வழங்கினர்.

அதன்படி, 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி பிற்பகல், தலைமன்னார், பீயர்கம பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிறுவனத்தின் கடற்படையினர் இரண்டு (02) நீர் பவுசர்களுடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு கடற்படையின் தீயணைப்பு குழுவினர், உள்ளூர் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை மிகுந்த சிரமத்துடன் கட்டுப்படுத்தி, சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.